ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கு திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர் சலபதி ராவ். இவரது மகன் ரவி பாபுவும் டோலிவுட்டில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளார். என்.டி.ராமராவ், கிருஷ்ணா, நாகார்ஜூனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்ளிட்டோரின் படங்களில் வில்லனாகவும் சலபதி ராவ் நடித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான 'அருந்ததி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சலபதி ராவ் நடித்திருந்தார். 'யமகோலா', 'யுகபுருஷடு', 'ஜஸ்டிஸ் சௌத்ரி', 'பொப்பிலி புலி', 'நின்னே பெளடடா', மற்றும் அல்லரி போன்ற படங்களின் மூலம் தெலுங்கு திரையுலகில் நன்கு அறியப்பட்ட சலபதி ராவ், இன்று அதிகாலை தனது 78வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானர். அவரது மறைவு தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




