இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீர மல்லு என்கிற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இயக்குனர் கிரிஷ் வெளியிட்டுள்ளார்.
வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் தான் பாபி தியோல் நடிக்க உள்ளார். முதன்முறையாக தென்னிந்திய திரையுலகில் நடிக்க இருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள பாபி தியோல், இப்படி ஒரு வரலாற்று படத்தில் எனக்கு நடிக்க முதல் வாய்ப்பு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.