ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீர மல்லு என்கிற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இயக்குனர் கிரிஷ் வெளியிட்டுள்ளார்.
வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் தான் பாபி தியோல் நடிக்க உள்ளார். முதன்முறையாக தென்னிந்திய திரையுலகில் நடிக்க இருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள பாபி தியோல், இப்படி ஒரு வரலாற்று படத்தில் எனக்கு நடிக்க முதல் வாய்ப்பு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.