ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
மோகன்லால் நடித்த ‛மான்ஸ்டர்' படம் கடந்த 21ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹனிரோஸ், லட்சுமி மஞ்சு சித்திக் உள்பட பலர் நடத்துள்ளனர். மோகன்லால் தற்போது அலோன், ஒலிவும் தீரவும், பரோஸ், ராம், எம்புரான், லூசிபர் 2 உள்பட பல படங்களில் நடிக்கிறார். 2024 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் மோகன்லால் அடுத்ததாக 'ஜல்லிக்கட்டு' படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் உடன் கைகோர்க்க உள்ளார். இது தொடர்பாக மோகன்லால் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளார். “எனது அடுத்த படம் இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான மற்றும் அபார திறமையான இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸுடன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தை ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ், மேக்ஸ் லேப்ஸ் மற்றும் செஞ்சுரி பிலிம்ஸ் தயாரிக்கும்'' என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லிஜோ ஜோஸ் தற்போது மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தமிழ் படத்தை இயக்கி வருகிறார்.