அஜித், ஆதிக் காம்போ உறுதி | கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது! | 'லியோ' படத்தில் உயிரிழந்த மடோனாவின் கேரக்டர் 'பென்ஸ்' படத்தில் உயிர் பெறுகிறதா? | சூர்யா 46வது படத்தின் பாடல் பயங்கரமாக வந்திருக்கு! - ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட தகவல் | சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ | உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பில் பவன் கல்யாண் | தெலுங்கு இயக்குனர்களுடன் மூன்றாவது முறை கூட்டணியில் சூர்யா | 150 நாள் படப்பிடிப்பு நடந்த 'இரண்டு வானம்' | 'பரியேறும் பெருமாள்' முதல் சாய்ஸ் அதர்வா | பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் செய்தாரா அதுல்யா |
தென்னிந்திய மொழி படங்களிலேயே கமர்ஷியலாகவும் வியாபார ரீதியாகவும் ஒரு குறுகிய வட்டத்திலேயே பின்தங்கி இருந்தது என்றால் அது கன்னட திரையுலகம் மட்டும்தான். இந்தநிலையில் பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் கன்னட திரையுலகை நோக்கி தென்னிந்திய ரசிகர்களின் பார்வையை மட்டுமல்ல பாலிவுட் திரையுலகையே சேர்த்து திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில் அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னடத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரிஷப் செட்டி என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வெளியாகும்போது சாதாரண படம் என்கிற அளவில் தான் வெளியானது. ஆனால் படம் வெளியான நாளிலிருந்தே இந்த படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்களும் படம் பார்த்தவர்களின் ஆச்சரிய கருத்துக்களும் இந்த படத்திற்கான எல்லையை தற்போது விரிவுபடுத்தி உள்ளன.
அந்த வகையில் இந்த படத்தை தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. மலையாளத்தில் இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார். அதேசமயம் தெலுங்கில் இந்த படத்தின் டப்பிங் உரிமையை பெற்றுள்ள பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இதன் பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளார். மேலும் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்