சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தென்னிந்திய மொழி படங்களிலேயே கமர்ஷியலாகவும் வியாபார ரீதியாகவும் ஒரு குறுகிய வட்டத்திலேயே பின்தங்கி இருந்தது என்றால் அது கன்னட திரையுலகம் மட்டும்தான். இந்தநிலையில் பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் கன்னட திரையுலகை நோக்கி தென்னிந்திய ரசிகர்களின் பார்வையை மட்டுமல்ல பாலிவுட் திரையுலகையே சேர்த்து திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில் அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னடத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரிஷப் செட்டி என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வெளியாகும்போது சாதாரண படம் என்கிற அளவில் தான் வெளியானது. ஆனால் படம் வெளியான நாளிலிருந்தே இந்த படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்களும் படம் பார்த்தவர்களின் ஆச்சரிய கருத்துக்களும் இந்த படத்திற்கான எல்லையை தற்போது விரிவுபடுத்தி உள்ளன.
அந்த வகையில் இந்த படத்தை தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. மலையாளத்தில் இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார். அதேசமயம் தெலுங்கில் இந்த படத்தின் டப்பிங் உரிமையை பெற்றுள்ள பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இதன் பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளார். மேலும் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்