ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாளத்தில் மாடம்பி, கிராண்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராடு, வில்லன், ஆராட்டு என மோகன்லாலை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அறியப்பட்ட இவர் தற்போது மம்முட்டியை வைத்து கிறிஸ்டோபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதற்குமுன் 12 வருடங்களுக்கு முன்பாக மம்முட்டியை வைத்து பிரமாணி என்கிற படத்தை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் இந்த படத்தில் கை கோர்த்துள்ளார்.
கதாநாயகிகளாக அமலாபால், ஐஸ்வர்ய லட்சுமி, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தான் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் மம்முட்டி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை தெரியப்படுத்தி உள்ள இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இந்தப்படத்தில் மம்முட்டி, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.