புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாத் பாஷி. இவர் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இந்த நிலையில் இவர் நடித்துள்ள சட்டம்பி என்கிற படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக யூடியூப் சேனல் ஒன்றின் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக பேட்டி அளித்தார். இந்த நிலையில் அவரைப் பேட்டி கண்ட தொகுப்பாளினி அவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்ததாக ஸ்ரீநாத் பாஷி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரித்தபோது ஸ்ரீநாத் பாஷி கூறுகையில், ‛பேட்டியின்போது தன்னை வேண்டுமென்றே மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட தொகுப்பாளினி கேள்விகளை கேட்டதாகவும் அதனால் தான் ஒரு கட்டத்தில் கோபத்துடன் பேச நேர்ந்ததாகவும்' கூறியுள்ளார். அது மட்டுமல்ல இன்னொரு சேனலிலும் இவர் பேட்டியின்போது அங்கிருந்து தொகுப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ கிளிப் ஒன்றும் வெளியாகி இன்னும் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.