விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 10 நபர்களில் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். 3 மாத சிறை தண்டனைக்குப் பிறகு ஜாமின் பெற்று தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட நடிகை, உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் தனது வழக்கின் விசாரணை பாரபட்சமாக இருப்பதாகவும் அங்கிருந்து முறையான நீதி கிடைக்காது என கருதுவதால் அதை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அதில் கோரிக்கை வைத்துள்ளார். கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி திலீப் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அதனால் இந்த விசாரணை நியாயமானதாக இல்லை என்றும் அதற்கு காரணமாக சம்பந்தப்பட்ட நடிகை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த காரணத்தை தெரியப்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நடிகை தரப்பில் கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கையையும் நிராகரித்த நீதிமன்றம் இந்த தகவலையும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வழக்கு விசாரணையை ஒரு பெண் நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நடிகை வைத்த கோரிக்கையின்படி தான் தற்போது பெண் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது