லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள சினிமாவில் நடிகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறியதுடன் அதை வெற்றி படமாகவும் ஆக்கினார். இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 40 வருடமாக நடிப்புலகிலேயே பயணித்து வந்த மோகன்லாலும் பாரோஸ் என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார். வழக்கமான கமர்சியல் ஆக்சன் பாதையில் செல்லாமல் குழந்தைகளை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார் மோகன்லால்.
போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று தற்போது சென்னையில் நடைபெற்று வந்த அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த வருடமே இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறாராம். மோகன்லால்.