பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள திரையுலகை சேர்ந்த வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி. தமிழில் கும்கி படத்தில் ரேஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், அதைத்தொடர்ந்து எட்டுத்திக்கும் மதயானை, கதகளி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். மலையாளத்தில் வில்லனாக, குறிப்பாக சைக்கோ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவியர்கள் முன்பாக காரில் இருந்தபடி தனது ஆடைகளை கழற்றி அநாகரிகமாக நடக்க முயன்றார். இதை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஸ்ரீஜித் ரவி தான் அது என்பதை உறுதி செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீஜித் ரவிக்கு ஜாமின் வழங்க மறுத்து விட்டதுடன் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீஜித் ரவி ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாரிடம் சொல்லப்பட்டாலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.