இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தற்போது ஷங்கர் இயக்கும் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் 1200 நடன கலைஞர்களுடன் இணைந்து ராம்சரண் -கியாரா அத்வானி நடனம் ஆடி உள்ளார்கள். அடுத்தபடியாக ராம்சரண் நடிக்கும் ஒரு ஆக்சன் காட்சியை படமாக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இந்த கட்சியில் அவருடன் இணைந்து 1000 ஸ்டண்ட் நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள். 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த சண்டை காட்சிக்கு தேவையான செட் பணிகள் நடந்து வரும் நிலையில் அந்த சண்டை காட்சியில் நடிப்பதற்காக ராம்சரணுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஷங்கர் படத்தில் நடித்து முடிந்ததும் தெலுங்கு இயக்குனர் கவுதம் தென்னனூரி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ராம்சரண், தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதற்கும் பாலிவுட் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த பிறகு தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார் ராம்சரண். அதன் காரணமாகவே அவரை வைத்து படம் தயாரிக்க முன்வந்துள்ள ஹிந்திப்பட தயாரிப்பாளர்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படங்களை தயாரிக்கப்போகிறார்களாம். அதனால் ஷங்கர் மற்றும் கவுதம் தென்னனூரி படங்களில் நடித்ததும் ஹிந்திக்கு செல்கிறார் ராம்சரண்.