கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த சம்பள உயர்வு திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சினிமாக்கள் நல்ல வசூலை குவித்து வருவதால் தொழிலாளர் சங்கம் சம்பள உயர்வு கேட்டு வந்தது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பாராமுகமாக இருந்தது.
இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 21ம் தேதி முதல் ஆந்திரா, தெலங்கானாவில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அங்கு நடந்து வந்த தமிழ் படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர், திரைப்பட தொழிலாளர் சங்கத்தினரை அழைத்து தெலுங்கானா அமைச்சர் சீனிவாஸ் யாதவ், பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று முதல் தொழிலாளர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.