கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
கடந்த 2015ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் பிக்கெட் 43'. ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றபின் தொடர்ந்து ராணுவ படங்களாக இயக்கி வரும் இயக்குனர் மேஜர் ரவி இயக்கத்தில் இந்த படம் வெளியானது. வழக்கமான ராணுவ படங்களில் இருந்து மாறுபட்டு எல்லையை பாதுகாக்கும் ஒரு இந்திய ராணுவ வீரனுக்கும், பாகிஸ்தான் ராணுவ வீரனுக்கும் ஏற்படும் உணர்வுப்பூர்வமான நட்பையும் இந்த இரண்டு வீரர்களுமே பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என தங்கள் உயிரை கொடுத்து போராடுவதையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருந்தது. அதனாலேயே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் இந்த படம் பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஏழு வருடங்கள் கழித்து இந்த படத்தை தற்போது மீண்டும் எதேச்சையாக பார்த்துள்ளார். இதை பார்த்தவுடன் தனது நெகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனர் மேஜர் ரவிக்கு சோசியல் மீடியா பக்கம் மூலமாக ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
அதில், "என்ன ஒரு அருமையான படம். மேஜர் ரவி சார் இதேபோன்று இன்னொரு படம் பண்ணுங்கள். நான் வேண்டுமென்றால் பிரித்விராஜிடம் சொல்லி இப்படி ஒரு படம் இயக்குமாறு உங்களிடம் கோரிக்கை வைக்க சொல்லவா ? என்று கேட்டுள்ளார். பொதுவாக ரசிகர்கள் ஒரு படத்தின் இயக்குனருக்கு இதுபோன்று கோரிக்கை வைப்பதை தாண்டி ஒரு இயக்குனரான அல்போன்ஸ் புத்ரனே இப்படி ஒரு இயக்குனருக்கு கோரிக்கை வைத்து இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.