‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் |
தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் சம்மேளத்தினர் கடந்த ஒரு வார காலமாக ஸ்டிரைக் செய்து வருகிறார்கள். அதனால், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இது சம்பந்தமாக இதுவரையில் நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இதனிடையே, தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் சினிமாடோகிராபி அமைச்சர் கண்டுல துர்கேஷைச் சந்தித்து ஸ்டிரைக் குறித்து ஆலோசித்துள்ளனர். இது தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் பொறுப்பின் கீழ் வந்தாலும், இது குறித்து ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். வேறு சில முன்னணி தயாரிப்பாளர்கள் தெலுங்கானா மாநில சினிமாடோகிராபி அமைச்சர் கோமட்டிரெட்டி வெங்கட் ரெட்டியை ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என இரண்டு தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் குறித்து முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் சிறிய தயாரிப்பாளர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பாளர்கள் சிறிய தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் அவர்களாகவே பேசி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.