இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'பராசக்தி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த டைட்டிலை வைப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி உரிமம் பெற்ற ஆதாரங்களை வெளியிட்ட பிறகு இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதே போன்று 40 வருடங்களுக்கு முன்பு ஒரு பிரச்னை உருவானது. 1985ம் ஆண்டு 'பராசக்தி' என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. ஏ ஜெகநாதன் இயக்கினார். சிவக்குமார், நளினி, ஜெய்சங்கர், கவுண்டமணி, செந்தாமரை உட்பட பலர் நடித்தனர். ஸ்ரீதேவி பகவதி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது.
1952ம் ஆண்டு சிவாஜி நடித்த ‛பராசக்தி'யின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் பராசக்தி என்கிற டைட்டிலை வைக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் படத்தின் தலைப்பை 'மீண்டும் பராசக்தி' என்று மாற்றப்பட்டு படம் வெளியானது.