9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'பராசக்தி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த டைட்டிலை வைப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி உரிமம் பெற்ற ஆதாரங்களை வெளியிட்ட பிறகு இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதே போன்று 40 வருடங்களுக்கு முன்பு ஒரு பிரச்னை உருவானது. 1985ம் ஆண்டு 'பராசக்தி' என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. ஏ ஜெகநாதன் இயக்கினார். சிவக்குமார், நளினி, ஜெய்சங்கர், கவுண்டமணி, செந்தாமரை உட்பட பலர் நடித்தனர். ஸ்ரீதேவி பகவதி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது.
1952ம் ஆண்டு சிவாஜி நடித்த ‛பராசக்தி'யின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் பராசக்தி என்கிற டைட்டிலை வைக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் படத்தின் தலைப்பை 'மீண்டும் பராசக்தி' என்று மாற்றப்பட்டு படம் வெளியானது.