தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படம்தான் தமிழின் முதல் வண்ணப்படம் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதற்கு முன்பே ஒரு வண்ணப் படம் வெளியானது. அதாவது கருப்பு வெள்ளையில் கருப்பு நிறத்திற்கு பதிலாக சிபியா எனப்படும் பழுப்பு நிறம் கலந்து திரையிடப்பட்டது.
அந்த வகையில் 1938ம் ஆண்டு வெளிவந்த 'தர்மபுரி ரகசியம்' அல்லது 'ராஜதுரோகி' படமே முதல் வண்ணப் படம் என்ற பெருமையை பெறுகிறது. படத்தின் விளம்பரத்திலேயே 'இயற்கை வர்ணக் காட்சிகள் அடங்கிய முதல் தமிழ்ப்படம்' என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது.
1930களில் புராண, சரித்திரக் கதைகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், தமிழின் முதல் வண்ணப்படமான 'தர்மபுரி ரகசியம்', சமூகக்கதையாக எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் மோட்டார் பைக், ரிவால்வர் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றதை அக்காலத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு டாக்கீஸ் சார்பாக எஸ்.சவுந்தரராஜன் இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகத் திகழ்ந்த சி.பி.ராமசாமி அய்யர் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.