நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தவப்புதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆதிபுருஷ் - ஞாயிறு திரைப்படங்கள் | பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா |
ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நித்தி அகர்வால் தமிழில் 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‛பூமி, கலகத் தலைவன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஜோடியாக ‛ஹரிஹர வீர மல்லு' படத்தில் நடித்தார், இந்தப் படம் சமீபத்தில் வெளிவந்தது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பவன் கல்யாணுடன் நித்தி அகர்வால் அரசு காரில் பயணம் செய்தார். இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டிருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில், ஆந்திர பிரதேச மாநிலம் பீமாவரம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகை நித்தி அகர்வால் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சிக்கு அவர் ஆந்திர மாநிலத்தின் அரசு வாகனத்தில் வந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இதுகுறித்து நித்தி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நான் வந்த வாகனம் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, வாகனத்தைப் பயன்படுத்துமாறு எந்த அரசு அதிகாரிகளும் என்னிடம் கூறவில்லை” என தெரிவித்துள்ளார்.