ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
கடந்த வருடம் ஜனவரியில் தெலுங்கில் நடிகர் ரவிதேஜா நடித்த கிராக் என்கிற படம் வெளியானது. கொரோனா முதல் அலை முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. அதற்கு முன்னதாக தொடர்ந்து தோல்விகளை தழுவிய ரவிதேஜாவுக்கு இந்தப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்து தலைநிமிர செய்தது. இந்தப் படத்தை இயக்குனர் கோபிசந்த் மாலினி இயக்கியிருந்தார்.
படம் வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதையை 2015-ல் நான் எழுதிய நாவல் ஒன்றில் இருந்து திருடி படமாக எடுத்துள்ளார்கள் என்று சிவசுப்பிரமணிய மூர்த்தி என்பவர் படத்தின் தயாரிப்பாளர் மீது ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதால் இதன் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதை திருட்டு குறித்து சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் புகார் கொடுக்காமல், நீதிமன்றத்திலும் வழக்கு தொடராமல் இப்படி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளது தெலுங்கு திரையுலகில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது