இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை இங்கு விஜய், அஜித் போலத்தான் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும்.. அங்கேயும் இருவரது ரசிகர்கள் வழக்கம்போல முரண்பட்டு கிடந்தாலும் அவர்கள் இருவரும் நட்பு பாராட்டவே செய்கின்றனர். குறிப்பாக பவன் கல்யானை வெளிப்படையாக பாராட்ட தயக்கம் காட்ட மாட்டார் மகேஷ்பாபு. அந்தவகையில் தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் வெளியாகியுள்ள பீம்லா நாயக் படம் பார்த்துவிட்டு பவன் கல்யாணின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார் மகேஷ்பாபு.
இதுபற்றி அவர் கூறும்போது, “பவன் கல்யாண் எரியும் நெருப்பு போல இருக்கிறார். என்ன ஒரு நடிப்பு..? பரபரப்பான டேனியல் சேகராக ராணாவின் திரை தோற்றம் வியக்க வைக்கிறது. சமீப காலத்தில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் எழுத்தில் உருவான படங்களில் இது ரொம்பவே சிறப்பானது. எனது லென்ஸ்மேனாக இருக்கும் ரவி கே சந்திரன் மற்றும் தமனின் இசை, இயக்குனர் சாஹர் சந்திரா என மொத்த குழுவுக்கும் எனது பாராட்டுக்கள்” என கூறியுள்ளார் மகேஷ்பாபு.