டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை இங்கு விஜய், அஜித் போலத்தான் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும்.. அங்கேயும் இருவரது ரசிகர்கள் வழக்கம்போல முரண்பட்டு கிடந்தாலும் அவர்கள் இருவரும் நட்பு பாராட்டவே செய்கின்றனர். குறிப்பாக பவன் கல்யானை வெளிப்படையாக பாராட்ட தயக்கம் காட்ட மாட்டார் மகேஷ்பாபு. அந்தவகையில் தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் வெளியாகியுள்ள பீம்லா நாயக் படம் பார்த்துவிட்டு பவன் கல்யாணின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார் மகேஷ்பாபு.
இதுபற்றி அவர் கூறும்போது, “பவன் கல்யாண் எரியும் நெருப்பு போல இருக்கிறார். என்ன ஒரு நடிப்பு..? பரபரப்பான டேனியல் சேகராக ராணாவின் திரை தோற்றம் வியக்க வைக்கிறது. சமீப காலத்தில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் எழுத்தில் உருவான படங்களில் இது ரொம்பவே சிறப்பானது. எனது லென்ஸ்மேனாக இருக்கும் ரவி கே சந்திரன் மற்றும் தமனின் இசை, இயக்குனர் சாஹர் சந்திரா என மொத்த குழுவுக்கும் எனது பாராட்டுக்கள்” என கூறியுள்ளார் மகேஷ்பாபு.




