விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பிரபல மலையாள நடிகர் திலீப் மீது ஏற்கனவே நடிகை கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளியே வந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் இவர் மீது இதே வழக்கு தொடர்பான இன்னொரு வழக்கும் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார் நடிகர் திலீப். கடந்த ஒரு மாத காலமாக கிட்டதட்ட ஐந்து, ஆறு முறை இதன் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக திலீப்பிடமும், அவரது சகோதரரிடமும், மைத்துனர் இடமும் போலீசார் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். எனவே வரும் 7ஆம் தேதி திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றே தெரிகிறது.