பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பிரபல மலையாள நடிகர் திலீப் மீது ஏற்கனவே நடிகை கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளியே வந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் இவர் மீது இதே வழக்கு தொடர்பான இன்னொரு வழக்கும் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார் நடிகர் திலீப். கடந்த ஒரு மாத காலமாக கிட்டதட்ட ஐந்து, ஆறு முறை இதன் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக திலீப்பிடமும், அவரது சகோதரரிடமும், மைத்துனர் இடமும் போலீசார் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். எனவே வரும் 7ஆம் தேதி திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றே தெரிகிறது.