ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் |
மலையாள நடிகர் திலீப், நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக, கடந்த சில் வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.. பின்னர் மூன்றுமாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடக்கும் நிலையில், இதே கடத்தல் விவாகரம் தொடர்பாக திலீப்பின் நண்பர் ஒருவர் அவருக்கு எதிராக அளித்த புகாரின் படி, புதிய வழக்கு ஒன்று திலீப் மீது பதியப்பட்டது. இது கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுத்து வருகிறது.
இந்த புதிய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு திலீப் விண்ணப்பித்திருந்தாலும், இப்போதுவரை அவருக்கு அது கிடைக்கவில்லை. சமீபத்தில் மூன்று நாட்கள் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜரானார் திலீப். அதுகுறித்த விசாரணை அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் திலீப் வசம் உள்ள அவரது மொபைல் போன்களை நீதிமன்றத்தில் இன்று (திங்கள்) ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. திலீப் கூடுதலாக ஒருநாள் அவகாசம் கேட்டும் நீதிமன்றம் சம்மதிக்கவில்லை. இதையடுத்து திலீப்பின் 3 மொபைல்கள், அவரது சகோதரர் (2) மற்றும் அவரது மைத்துனர் (1) ஆகியோருடையதையும் சேர்த்து மொத்தம் ஆறு மொபைல் போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார் திலீப்.