பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
மலையாள நடிகர் திலீப், நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக, கடந்த சில் வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.. பின்னர் மூன்றுமாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடக்கும் நிலையில், இதே கடத்தல் விவாகரம் தொடர்பாக திலீப்பின் நண்பர் ஒருவர் அவருக்கு எதிராக அளித்த புகாரின் படி, புதிய வழக்கு ஒன்று திலீப் மீது பதியப்பட்டது. இது கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுத்து வருகிறது.
இந்த புதிய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு திலீப் விண்ணப்பித்திருந்தாலும், இப்போதுவரை அவருக்கு அது கிடைக்கவில்லை. சமீபத்தில் மூன்று நாட்கள் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜரானார் திலீப். அதுகுறித்த விசாரணை அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் திலீப் வசம் உள்ள அவரது மொபைல் போன்களை நீதிமன்றத்தில் இன்று (திங்கள்) ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. திலீப் கூடுதலாக ஒருநாள் அவகாசம் கேட்டும் நீதிமன்றம் சம்மதிக்கவில்லை. இதையடுத்து திலீப்பின் 3 மொபைல்கள், அவரது சகோதரர் (2) மற்றும் அவரது மைத்துனர் (1) ஆகியோருடையதையும் சேர்த்து மொத்தம் ஆறு மொபைல் போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார் திலீப்.