ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி ஆகியோருக்கு அடுத்தபடியாக இளம் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் டொவினோ தாமஸ். தமிழிலும் மாரி 2 படத்தில் வில்லனாக, மற்றும் அபியும் அனுவும் என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டி அதன் பிறகு இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து பின் தனி ஹீரோவாக ஒரு படத்தையே தாங்கிப் பிடிக்கும் அளவிற்கு முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ள டொவினோ தாமஸ்.
சமீபத்தில் மலையாளத்தில் இவர் சூப்பர்மேனாக நடித்த மின்னல் முரளி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பத்து வருடத்திற்கு முன்பு சரியாக இதே தினத்தில் தான் நான் கேமரா முன்பாக முதன்முதலாக நின்றேன் என்று கூறி தனது பத்து வருட திரையுலக பயணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ள டொவினோ தாமஸ். இந்த பயணத்தில் தனக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி கூறியுள்ளதோடு இன்னும் பத்து வருடங்கள் கழித்து இதேபோன்று ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் பதிவிடுவதற்காக இப்போதிருந்தே காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.