புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். தற்போது பிரித்விராஜ், நயன்தாரா இருவரையும் வைத்து கோல்ட்(தங்கம்) என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தநிலையில் வெங்கட் பிரபு சிம்பு கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற மாநாடு படத்தை சமீபத்தில் பார்த்த அல்போன்ஸ் புத்ரன் படம் குறித்தும் அதில் பங்கு பெற்றவர்கள் குறித்தும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “மன்மதன் படத்தில் நடித்தது போன்ற சிம்புவை மீண்டும் இதில் பார்க்க முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும் கூட அவரது டைரக்ஷனில் நடிப்பது போன்றே ரிலாக்ஸாக நடித்திருந்தார். தவிர வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது..
சரோஜா படத்தில் இடம்பெற்ற 'நிமிர்ந்து நில் துணிந்து செல்' என்கிற பாடல், நான் பலமுறை சோர்ந்துபோய் அமர்ந்த நேரத்திலெல்லாம் எனக்கு உற்சாகம் அளித்து, ஊக்கப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல உதவியது. இந்தப் பாடலை உருவாக்கிய உங்கள் இருவருக்கும் நான் என்ன திருப்பி செய்யப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை” என உருக்கமாக கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.