துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஜோக்கர் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவன ஈர்ப்பு செய்த குரு சோமசுந்தரம், இங்கு மட்டுமல்ல மலையாள திரையுலக படைப்பாளிகளையும் ரொம்பவே கவர்ந்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் இணைந்து இவர் நடித்த மின்னல் முரளி படம் வெற்றி பெற்றுள்ளதுடன் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் பெற்று தந்துள்ளது.
இந்த படத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பை பார்த்துவிட்டு மோகன்லால் தான் இயக்க உள்ள பாரோஸ் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அழைத்துள்ளார். இந்த நிலையில் மின்னல் முரளிக்கு கிடைத்த வரவேற்பால் ஏற்கனவே குரு சோமசுந்தரம் மலையாளத்தில் நடித்து வந்த சட்டம்பி என்கிற படமும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு நண்பனாக முனியாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குரு சோமசுந்தரம். இந்தப் படத்தை அபிலாஷ் எஸ் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.