வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று டிசம்பர் 17ம் தேதி வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர்.
4 மொழிகளில் நேற்று வெளியான நிலையில் மலையாளத்தில் மட்டும் படம் வெளியாகவில்லை. படத்தின் மலையாள டப்பிங்கில் 'சின்க்' பிரச்சினை கடைசி நேரத்தில் ஏற்பட்டது. அதை உடனடியாக சரி செய்து படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. எனவே, படத்தை கேரளாவில் வெளியிடும் நிறுவனம், படம் டிசம்பர் 18ம் தேதிதான் வெளியாகும் என அறிவித்தது.
அதன்படி கேரளா முழுவம் இன்று தான் படம் வெளியாகிறது. பொதுவாகவே அல்லு அர்ஜுன் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும், படத்தில் மலையாள நடிகரான பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். எனவே, கேரள வசூலில் இப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நேற்று திட்டமிட்டபடி வெளியாகாத காரணத்தால் முதல் நாள் வசூல் கிடைக்காதது அவர்களுக்கு நஷ்டம்தான்.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. தமிழ், தெலுங்கிலும் இப்படம் கேரளாவில் நேற்று வெளியாகி உள்ளது.