கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
பிரமாண்டமான படங்களை எடுப்பது போலவே புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரமாண்டம் காட்டும் பணியையும் செய்து வருகிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமவுலி. தற்போது ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கனை வைத்து அவர் இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் தென்னிந்தியா முழுவதும் படக்குழுவினருடன் சுற்றிய ராஜமவுலி இந்தப்படத்தின் ஹிந்தி வெளியீட்டிற்கான மாபெரும் புரமோஷன் நிகழ்ச்சியை மும்பையில் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரமாண்டம் காட்ட தீர்மானித்துள்ள ராஜமவுலி, ஐதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 3000 ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ரசிகர்கள். இந்த மாபெரும் கூட்டத்தை கூட்டுவதன் மூலம் பாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் படத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்துவதற்கான ராஜமவுலியின் மாஸ்டர் பிளான் இது என்று சொல்கிறார்கள்.