பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
தெலுங்கில் சுகுமார் டைரக்சனில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் புஷ்பா. செம்மரக்கடத்தல் பின்னணியில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்கிற பெயரில் வரும் டிச-17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் சேர்த்து பான் இந்தியா படமாக இது வெளியாகிறது.
அந்தவகையில் இதன் மலையாள பதிப்பில் அல்லு அர்ஜுனுக்காக குரல் கொடுத்து தனது டப்பிங் பணியை முடித்துள்ளார் மலையாள இயக்குனர் ஜிஸ் ஜாய். அல்லு அர்ஜுன் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கோத்ரி படம் முதற்கொண்டு தற்போது புஷ்பா வரை இவர் தான் அவருக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அடிப்படையில் டப்பிங் கலைஞரான ஜிஸ் ஜாய், 2003ல் அல்லு அர்ஜுனின் கங்கோத்ரி படத்திற்கு மலையாளத்தில் டப்பிங் பேசியதன் மூலமாகத்தான் சினிமாவிலேயே நுழைந்தார். அதன்பின்னர் பத்து வருடங்கள் கழித்து இயக்குனராக அவதாரம் எடுத்த இவர், இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார். டைரக்சனில் இறங்கிய பின் டப்பிங் பேசுவதை குறைத்துக் கொண்டாலும் தனக்கு சினிமாவில் அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர் என்பதால் அல்லு அர்ஜுன் படங்களுக்கு மட்டும் விடாமல் தொடர்ந்து டப்பிங் பேசி வருகிறார்.