பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது மனைவி கிரண்ராவை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 1986ம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்த ஆமீர்கான், 2002ல் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு 2005ம் அண்டு கிரண் ராவை திருமணம் செய்து கொண்டவர் தற்போது அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது பாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாங்கள் ஏன் விவாகரத்து செய்கிறோம் என்பது குறித்து ஆமீர்கானும், அவரது மனைவி கிரண்ராவும் இணைந்து விளக்கம் அளித்துள்ளனர். பாலிவுட் மீடியா ஒன்றுக்கு ஜூம் மீட்டிங் மூலம் அவர்கள் விளக்கம் அளித்தபோது இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி, கைகளை இறுக பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வீடியோவில் ஆமீர்கான் பேசியிருப்பதாவது: எங்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இந்த முடிவால் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளோம். கணவன் - மனைவி என்கிற உறவை மட்டுமே நாங்கள் இழக்கிறோம். மகன் ஆசாத்துக்காக இருவரும் ஒரே குடும்பமாக எப்போதுமே நட்பு பாராட்டி வாழ்வோம்.
நாங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்த கடந்த 15 ஆண்டுகளும் எங்களுக்கு பொன்னான ஆண்டாகவே இருந்தது. வாழ்க்கையை நிறைய சந்தோஷ தருணங்களுடன் வாழ்ந்து முடித்து விட்டோம். இனி இருவரும் சுதந்திர பறவையாக பறக்க ஆசைப்படுகிறோம். ரசிகர்கள் எங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இதனை ஒரு முடிவாக பார்க்காதீர்கள். இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பமாக பாருங்கள். என இருவரும் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.