பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். லகான், தங்கல், பிகே என இவர் நடிக்கும் படங்களுக்கு மொழியை கடந்து ரசிகர்கள் ஏராளம். ரீனா தத்தை முதலில் திருமணம் செய்து கொண்டார் நடிகர் அமீர் கான். இந்த தம்பதிக்கு ஐரா கான், ஜூனைத் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்னர் 2005-ம் ஆண்டு கிரண் ராவை அமீர் கான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இன்று அமீர் கான் - கிரண் ராவ் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது : 15 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தோம். ஆனால் நாங்கள் இருவருமே தனித்தனியாக புதிய வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இனி நாங்கள் கணவன் மனைவி அல்ல. பெற்றோர் மட்டுமே... இந்த முடிவை சில காலத்துக்கு முன்பே எடுத்துவிட்டோம். ஆனால் சில நடைமுறைகளால் அறிவிக்க தாமதம் ஆனது.
நாங்கள் இருவரும் மண வாழ்க்கையில் பிரிந்தாலும் தொடர்ந்து திரைத்துறையிலும், சமூகசேவையிலும், எங்கள் குழந்தையை வளர்ப்பதிலும் இணைந்தே செயல்படுவோம். விவாகரத்து என்பது முடிவு அல்ல. அது இன்னொரு புதிய வாழ்க்கைக்கான தொடக்கம். எங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம்'. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.