எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பொருத்தவரை, இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என பெயர் பெற்றுள்ள அளவிற்கு, கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக, கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும், அதிக அளவில் நிதி உதவியும் செய்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அதுமட்டுமல்ல தற்போது ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள பாந்திப்பூரா மாவட்டத்திலுள்ள நீரு என்கிற பகுதிக்கு தனி ஹெலிகாப்டரில் சென்ற அக்ஷய் குமார் அந்த பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் வாலிபால் மற்றும் நடனம் ஆடவும் செய்தார். அதுமட்டுமல்ல அந்த நீரு கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்திய அவர், அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார். அக்ஷய் குமாரின் இந்த செயல் ராணுவ வீரர்களையும் காஷ்மீர் எல்லைப் பகுதி மக்களையும் ஒருசேர மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது