கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரணவத், அதற்கேற்றார்போல் சர்ச்சையான கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார். பின்விளைவுகள் பற்றி அறியாமல் அவர் கூறும் கருத்துக்களால் தற்போது அவருக்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஊரடங்கு ஓரளவுக்கு தளர்வு பெற்றபின், படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கிறார் கங்கனா. அவருடைய தற்போதைய பாஸ்போர்ட் செப்டம்பர் 13ல் காலாவதி ஆவதால் அதை முன்கூட்டியே புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார் கங்கனா.
ஆனால் அவர் ஏற்கனவே தனது ட்விட்டரில், சர்ச்சையை தூண்டும் விதமாக கருத்துக்களை கூறியதாக, அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளதால் விசாவை புதுப்பிக்க முடியாது என கூறிவிட்டார்கள் விமான நிலைய அதிகாரிகள். இதைத்தொடர்ந்து கங்கனாவும் அவரது சகோதரியும் தங்களுக்கு படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருப்பதை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான அனுமதி வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை மனு செய்துள்ளனர்.