திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், திஷா பதானி மற்றும் பலர் நடித்த 'ராதே' படம் ரம்ஜானை முன்னிட்டு டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளிவந்தது. படம் பற்றி மோசமான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது.
அப்படி ஒரு மோசமான விமர்சனத்தை பிரபல ஹிந்திப்பட விமர்சகரான கமால் கான் என்பவர் வெளியிட்டிருந்தார். ஹிந்தி நடிகர்கள், நடிகைகளை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர் என்று அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் தான் இந்த கமால் கான்.
'ராதே' விமர்சனத்திற்காக தற்போது அவர் மீது மும்பை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சல்மான் கான். அது பற்றிய வக்கீல் நோட்டீசை வெளியிட்ட கமால் கான், “எனது பாலோயர்களுக்காக நான் விமர்சனம் செய்கிறேன். நான் படங்களுக்கு விமர்சனம் செய்வதை நிறுவத்துவதற்குப் பதிலாக நீங்கள் நல்ல படங்களை எடுக்கலாம் சல்மான் கான்,” என நேற்று டுவீட் செய்திருந்தார் கமால் கான்.
ஆனால், இன்று காலை வெளியிட்டுள்ள டுவீட்களில், “டியர் சலீம்கான் சாப், நான் சல்மான் கானின் படங்களையோ வாழ்க்கையையோ அழிக்க இங்கு இல்லை. நான் ஒரு கேளிக்கைக்காக விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனத்தால் சல்மான் பாதிக்கப்பட்டிருந்தால் இனி நான் விமர்சனம் செய்யவில்லை. அவர் தனது படத்தை விமர்சிக்க வேண்டாம் எனக் கேட்டிருந்தால் நான் விமர்சனம் செய்திருக்க மாட்டேன்.
அப்படி சொல்லியிருந்தால் அவர் படத்தை நான் விமர்சனம் செய்யாமலிருக்க இப்படி வழக்கு தொடர்ந்திருக்கத் தேவையில்லை. சலீம் சார், நான் யாரையும் புண்படுத்த இங்கில்லை. எதிர்காலத்தில் நான் அவர் படங்களை விமர்சனம் செய்யவில்லை. அதனால் வழக்கு தொடர்வதை நிறுத்தச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பினால் விமர்சன வீடியோவையும் நீக்கி விடுகிறேன்,” என சல்மான் கானின் அப்பா சலீம் கானுக்கு டுவீட் செய்து பதிவிட்டுள்ளார்.