ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கர்நாடகத்தில் பிறந்து உலக அழகியாக பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் படங்களில் நடித்தவர் தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட அவர் அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் முதல் அலை தொடங்கியபோது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் ஆன்லைனில் படிக்கும் குழந்தைகளுக்கு உதவினார். தற்போது இரண்டாவது அலையில் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் நிதி திரட்டும் பணியை முடுக்கி விட்டுள்ளார். தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதுவரை 3 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வசூலாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் கூறியிருப்பதாவது: எனது முயற்சிக்கு மக்கள் அளித்த ஆதரவால் இதுவரை 20 கோடி ரூபாய் வரை நிதி திரண்டுள்ளது. தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது. இந்த நிதியில் இருந்து 10 கொரோனா மையங்களுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 422 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி கொடுத்துள்ளோம். 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்து வருகிறோம். நன்கொடை அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார் பிரியங்கா.