பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
மலையாளத்தில் கடந்த வருடம் பிரித்விராஜ் மற்றும் பசில் ஜோசப் இருவரும் நடித்த குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இதை விபின் தாஸ் இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து இயக்கிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் வரவேற்பு பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக மீண்டும் பிரித்விராஜை வைத்தே சந்தோஷ் டிராபி என்கிற படத்தை இயக்குகிறார்.
இதற்கு முன்பு குருவாயூர் அம்பல நடையில் படம் காமெடி மற்றும் கமர்சியல் அம்சங்களுடன் வெளியானது. ஆனால் இந்த சந்தோஷ் ட்ராபி படத்தை இயக்குனரின் விருப்பப்படி அவரது படமாக உருவாக்கும்படி நடிகர் பிரித்விராஜ் அன்பு கட்டளை போட்டு விட்டாராம். அதனால் அதற்கேற்றபடி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் விபின் தாஸ்.
இதில் ஒரு புதிய விஷயமாக கிட்டத்தட்ட 60 புதுமுக நடிகர்கள் பிரித்விராஜுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இது விளையாட்டு சம்பந்தமான படம் என்பதால் இத்தனை புதுமுக நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.