விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா |

ஹிந்தி படங்களை அடுத்து தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், மும்பையில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டுள்ளார் . அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவை பார்த்து பலரும் சுதந்திர தினத்தன்று சொல்லக்கூடியதை கிருஷ்ண ஜெயந்தி அன்று சொல்வதா? என்று கருத்து வெளியிட்டு அவரை டிரோல் செய்தனர்.
அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். அதில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பலரும் பாரத் மாதா கி ஜெய் என்று கூறினார்கள். அதைக் கேட்டுதான் நானும் சொன்னேன். ஆனால் நான் சொன்னதை மட்டும் கட் பண்ணி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள். அதோடு, பாரத் மாதா கி ஜெய் என்ற வாசகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.