சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாவுக்காக வந்திருந்த 26 அப்பாவி பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து எதிரிகளுக்கு தக்க பதிலடி தர அரசு தயாராகி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த தாக்குதல் பற்றி கேட்கப்பட்ட போது தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இது வெறும் பஹல்காம் மீது மட்டும் தொகுக்கப்பட்டுள்ள தாக்குதல் அல்ல.. ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கை மீதும் கொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.. அந்த சம்பவத்தில் தங்கள் கண்முன்னே தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையையும், தங்களது கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் தீராத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இப்போது நாம் எடுத்துக் கொண்டுள்ள இந்த நேரம் கூட, இந்தியா இதற்கு எப்படி தக்க வகையில் பதில் கொடுக்கும் விதமாக எதிர்வினையாற்ற போகிறது என்பதற்காக தான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.