ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி : முன்பதிவு நிலவரம் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி | மகனுக்காக படம் தயாரிக்காதீர்கள் : தயாரிப்பாளர்களுக்கு பேரரசு வேண்டுகோள் | 12 படங்களில் நடித்தும் ஒரே ஒரு படம் தான் வெளியாகி உள்ளது : புதுமுக நடிகை வருத்தம் | பிளாஷ்பேக் : எதிர்ப்புகளால் மாற்றப்பட்ட ரஜினி படத்தலைப்பு | பிளாஷ்பேக் : டி.எஸ்.பாலையா ஹீரோவாக நடித்த 'சண்பகவல்லி' | பஹல்காம் தாக்குதல்: நடிகர் அஜித் கண்டனம் | அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன் | நிறைவுக்கு வரும் 'குட் பேட் அக்லி' ஓட்டம் | அக்டோபரில் 'பாகுபலி' ரீரிலீஸ் |
ஹிந்தித் திரையுலகத்தில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பரேஷ் ராவல். ஹிந்தி தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார். 'சூரரைப் போற்று' படத்தின் மெயின் வில்லன் இவர்தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட முட்டி காயம் சீக்கிரம் குணமடைவதற்காக தனது சிறுநீரை 15 நாட்களுக்குக் குடித்ததாகக் கூறியிருந்தார்.
அவரது கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அது குறித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுநீரைக் குடிப்பதால் அது குணமடைய வைக்கும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவுமில்லை என டாக்டர்கள் பதிவு செய்து வருகின்றனர். அதனால், பாதிப்புகள்தான் வரும் என தெரிவித்துள்ளனர்.