யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது. முன்னணி வீரரான விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்தார். அவரது ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர்களும் ரசித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பாகிஸ்தான் நடிகையான மாயா அலி என்பவர் விராட் கோலி சதமடித்த வீடியோவைப் பகிர்ந்து, “அவருக்கு மிகப் பெரிய மரியாதை… ராஜா என்பதற்கான காரணம்”, எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் நாட்டில் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள நடிகை ஒருவர் விராட்டைப் புகழ்ந்து பதிவிட்டது இந்திய ரசிகர்களாலும் பகிரப்பட்டு வருகிறது.