மீண்டும் கைகோர்க்கும் 'பேட்ட' கூட்டணி | ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு நிறைவடைந்தது | ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்' | பூரி ஜெகன்நாத் உடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி | கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி | 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? |
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன். தமிழிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 தொகையை பெறுவதற்கான அரசு விண்ணப்பத்தில் சன்னி லியோன் பெயரும் குறிப்பிட்டு ஆன்லைனில் வங்கி கணக்கு தொடங்கி அரசின் திட்டங்களை பெற்று வந்தது அதிர்ச்சி அடைய வைத்தது.
சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த சன்னி லியோன் இது குறித்து வெளியிட்ட பதிவில், "சத்தீஸ்கரில் என் பெயரையும், என் அடையாளத்தையும் தவறாக பயன்படுத்தி பெண்களுக்கு பயனளிக்கும் அரசின் திட்டத்தை தவறாக பயன்படுத்தி இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.