ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பிரபல நடிகை சன்னி லியோன், கேரளாவிலுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரிடத்தில் பணமோசடி செய்துள்ளதாக அவர் மீது கேரள டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள பெரும்பாவூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீயாஸ். இவர் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை சன்னி லியோனிடம் ரூ.29 லட்சம் அளித்திருக்கிறார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட சன்னிலியோன் சொன்னபடி குறித்த நாளில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையாம்.தற்போது டிவி தொடரில் நடிப்பதற்காக கேரளாவில் முகாமிட்டுள்ள சன்னிலியோன் மீது ஸ்ரீயாஸ் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.
அதையடுத்து, திருவனந்தபுரம் பூவாரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருக்கும் சன்னிலியோனிடம் கேரளா போலீஸ் விசாரித்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று காரணமாகவே குறிப்பிட்ட அந்த தேதியில் தன்னால் ஸ்ரீயாஸ் அழைத்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று சன்னிலியோன் தனது சார்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.