சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ரத்தா கபூர். வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள். ஏக் வில்லன், ஏபிசிடி, பாகி, ராக் ஆன் 2, ஸ்ட்ரீட் டான்சர், பகேடியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார்.
புனேயில் உள்ள ஒரு ஷோரூம் திறப்பு விழாவுக்கு ஸ்ரத்தா கபூர் சென்றார். இதற்கு அவர் கணிசமான தொகை சம்பளமாக பெற்றிருந்தார். திறப்பு விழாவுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு அவர் சென்றார். அங்கு பாதுகாப்புக்கு 2 போலீசார் மட்டுமே நின்றிருந்தனர். இதனால் திடீரென அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உள்ளே புகுந்தனர்.
கூட்டத்துடன் புகுந்த ரசிகர்கள் பலர் ஸ்ரத்தாவை கட்டிபிடித்து செல்பி எடுக்க முண்டியடித்தனர். சிலர் அவரை கண்ட இடத்தில் தொட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரத்தா தனது உதவியாளர்களையும், போலீசையும் உதவிக்கு அழைத்தார். அவர்களோடு பவுன்சர்களும் வந்து சேர எல்லோருமாக சேர்ந்து ஸ்ரத்தாவை திறப்பு விழா பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விழா முடிந்தும் கூடுதல் போலீசார், கூடுதல் பவுன்சர்கள் வந்து அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் விழா ஏற்பாட்டாளர்கள் இதற்காக வருத்தம் தெரிவித்தனர். இந்த வீடியோவை தற்போது ஸ்ரத்தா தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.