அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ரத்தா கபூர். வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள். ஏக் வில்லன், ஏபிசிடி, பாகி, ராக் ஆன் 2, ஸ்ட்ரீட் டான்சர், பகேடியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார்.
புனேயில் உள்ள ஒரு ஷோரூம் திறப்பு விழாவுக்கு ஸ்ரத்தா கபூர் சென்றார். இதற்கு அவர் கணிசமான தொகை சம்பளமாக பெற்றிருந்தார். திறப்பு விழாவுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு அவர் சென்றார். அங்கு பாதுகாப்புக்கு 2 போலீசார் மட்டுமே நின்றிருந்தனர். இதனால் திடீரென அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உள்ளே புகுந்தனர்.
கூட்டத்துடன் புகுந்த ரசிகர்கள் பலர் ஸ்ரத்தாவை கட்டிபிடித்து செல்பி எடுக்க முண்டியடித்தனர். சிலர் அவரை கண்ட இடத்தில் தொட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரத்தா தனது உதவியாளர்களையும், போலீசையும் உதவிக்கு அழைத்தார். அவர்களோடு பவுன்சர்களும் வந்து சேர எல்லோருமாக சேர்ந்து ஸ்ரத்தாவை திறப்பு விழா பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விழா முடிந்தும் கூடுதல் போலீசார், கூடுதல் பவுன்சர்கள் வந்து அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் விழா ஏற்பாட்டாளர்கள் இதற்காக வருத்தம் தெரிவித்தனர். இந்த வீடியோவை தற்போது ஸ்ரத்தா தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.