ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சமீபத்தில் திரைக்கு வந்த கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கர்ப்பமாக இருந்த அவர், இப்பட பிரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது தரையில் படுத்துக் கொண்டு சுவற்றில் கால்களை மட்டும் உயர தூக்கியபடி யோகா செய்யும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இது போன்ற யோகா பெண்களின் தசைகள், மூட்டுகள், கணுக்கால், பாதங்களில் ஏற்படும் வலியை போக்குகின்றன. அதோடு முதுகின் கீழ் புறத்தில் அழுத்தத்தை குறைக்கவும், சோர்வான உணர்வுகளை போக்குவதற்கும் இந்த யோகா பயன்படுகிறது. உடலை அழகாக வைத்திருப்பதற்கு மட்டுமின்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இந்த பயிற்சியை நான் செய்கிறேன். உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில் இந்த எளிய யோகா பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்கிறேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.