ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சமீபத்தில் திரைக்கு வந்த கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கர்ப்பமாக இருந்த அவர், இப்பட பிரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது தரையில் படுத்துக் கொண்டு சுவற்றில் கால்களை மட்டும் உயர தூக்கியபடி யோகா செய்யும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இது போன்ற யோகா பெண்களின் தசைகள், மூட்டுகள், கணுக்கால், பாதங்களில் ஏற்படும் வலியை போக்குகின்றன. அதோடு முதுகின் கீழ் புறத்தில் அழுத்தத்தை குறைக்கவும், சோர்வான உணர்வுகளை போக்குவதற்கும் இந்த யோகா பயன்படுகிறது. உடலை அழகாக வைத்திருப்பதற்கு மட்டுமின்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இந்த பயிற்சியை நான் செய்கிறேன். உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில் இந்த எளிய யோகா பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்கிறேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.