இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லோக்சபா தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று அதற்கான ஓட்டுப்பதிவு நடந்தது. பல பாலிவுட் பிரபலங்கள் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே அவரது கணவர் ரன்வீர் சிங் உடன் வந்து ஓட்டளித்தார். கர்ப்பிணியான தீபிகா ஓட்டளிக்க வந்த போது அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக தீபிகாவை ஒரு கையில் அணைத்தபடி அழைத்துச் சென்றார் ரன்வீர். யாரும் தன்னை தள்ளிவிட்டுவிடக் கூடாது என தனது கர்ப்ப வயிற்றில் கை வைத்தவாறே கவனத்துடன் சென்றார் தீபிகா.
தாய்மை பற்றி தீபிகா, ரன்வீர் அறிவித்த பின்பு தீபிகா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அதனால், அவரது கர்ப்பம் குறித்து சில ஊடங்களில் சந்தேகத்தை எழுப்பினர். இந்நிலையில் தீபிகா கர்ப்ப வயிற்றுடன் வந்து ஓட்டளித்தது அந்த ஊடகங்களின் சந்தேகத்திற்கு பதிலளித்தது.
தீபிகாவுக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் எனத் தெரிகிறது.