‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவில் சாண்டோ சின்னப்பா தேவருக்குபின், நடிகர் சிவகுமாருக்குபின், நடிகர் யோகிபாபு தீவிர முருகபக்தராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் கேரவனில் உள்ளும், புறமும் அவ்வளவு முருகன் ஓவியங்கள், அறுபடை வீடு முருகனும் அதில் இருக்கிறார். அவர் காரில், வீட்டில் ஏகப்பட்ட முருகன் போட்டோக்கள்.
எந்த ஊர் படப்பிடிப்பு என்றாலும் அருகில் இருக்கும் முருகன் கோயில்களுக்கு அவர் சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் சினிமா வாய்ப்பு இல்லாமல், எதிர்காலம் குறித்து கஷ்டப்பட்ட காலத்தில் திருத்தணி சென்று முருகனிடம் மனமுருக வேண்டுவாராம். அவர் ஆசையை முருகன் நிறைவேற்ற இப்போது முருகன் மீது அவருக்கு தனிபிரியம், பாசம், பக்தி. யோகிபாபு தனது மகனுக்கு விசாகன், மகளுக்கு பரணி கார்த்திகா என்று முருகன் திருநாமங்களை பெயராக வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது




