விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமிழ் சினிமாவில் சாண்டோ சின்னப்பா தேவருக்குபின், நடிகர் சிவகுமாருக்குபின், நடிகர் யோகிபாபு தீவிர முருகபக்தராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் கேரவனில் உள்ளும், புறமும் அவ்வளவு முருகன் ஓவியங்கள், அறுபடை வீடு முருகனும் அதில் இருக்கிறார். அவர் காரில், வீட்டில் ஏகப்பட்ட முருகன் போட்டோக்கள்.
எந்த ஊர் படப்பிடிப்பு என்றாலும் அருகில் இருக்கும் முருகன் கோயில்களுக்கு அவர் சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் சினிமா வாய்ப்பு இல்லாமல், எதிர்காலம் குறித்து கஷ்டப்பட்ட காலத்தில் திருத்தணி சென்று முருகனிடம் மனமுருக வேண்டுவாராம். அவர் ஆசையை முருகன் நிறைவேற்ற இப்போது முருகன் மீது அவருக்கு தனிபிரியம், பாசம், பக்தி. யோகிபாபு தனது மகனுக்கு விசாகன், மகளுக்கு பரணி கார்த்திகா என்று முருகன் திருநாமங்களை பெயராக வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது