டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

56 வயதான அக்ஷய் குமார், பாலிவுட்டின் முன்னணி நடிகர். கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவின், இந்தியாவின் முகமாக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட அக்ஷய்குமார் இப்போதுதான் முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்துள்ளார்.
அதற்கு காரணம் அவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவராகத்தான் இத்தனை ஆண்டுகள் இருந்துள்ளார். 'ஒர்க்கிங் பெர்மிட்' மூலம்தான் அவர் இந்தியாவில் வாழ்ந்து வந்தார். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதனால் இந்திய குடியுரிமையை கடந்த ஆண்டு அவர் பெற்றார். அதனை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது அவர் நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நமது இந்தியா வளர்ச்சி அடைந்து வலுவானதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அதை மனதில் வைத்தே நான் ஓட்டளித்தேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு யார் சரியானவர் என்ற எண்ணம் வந்தால் அவர்களுக்கு ஓட்டளிக்கலாம். ஓட்டுப்பதிவு சதவீதம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். நான் ஓட்டு போட்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என தெரிவித்தார்.