மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு சரித்திரக் கதைகள் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும் வெளிவந்தது.
இந்நிலையில் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பிரம்மாண்டப் படங்களாகத் தயாரிக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி 'ராமாயணம்' படத்தை இயக்க உள்ளார்.
அடுத்த மாதம் ஏப்ரல் 17ம் தேதி ராம நவமி அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபீர், சீதையாக சாய் பல்லவி நடிக்கப் போகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளது.
ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல், கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோல், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங், கைகேயி கதாபாத்திரத்தில் லாரா தத்தா நடிக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ராமாணயத்தை மையமாக வைத்து இதற்கு முன் சில மொழிகளில் படங்கள் வந்துள்ளன. புதிதாக உருவாக உள்ள இந்த ராமாயணப் படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.