என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும், விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருப்பதை போன்று பாலிவுட்டில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் ஆகிய மூவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த மூவரும் திடீரென சல்மான்கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு அதிகாலை 4 மணி வரை நடந்துள்ளது. இதில் அவர்கள் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளனர். அமீர்கான் தனது பிரேக்கை கைவிட்டு மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று சல்மான்கானும், ஷாருக்கானும் கேட்டுக் கொண்டுள்ளனர். மூவரும் இணைந்து ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்றும், இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.