பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான சல்மான்கானின் சகோதரிகளில் ஒருவர் அர்பிதா கான். சமீபத்தில் இவரது வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடுகள் காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளித்தார். தனது வீட்டிற்கு அவ்வப்போது உதவி செய்து வந்த பணியாளர் சந்தீப் ஹெக்டே என்பவர் மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சந்தீப் ஹெக்டே அந்த வைரத்தோடுகளை திருடியது உறுதியானது. அதுமட்டுமல்ல அவர் நகைகளை திருடியவுடன் எந்த ஒரு முன்னறிவிப்பும் சொல்லாமல் வேலைக்கு வராமல் ஓடிவிட்டதும் போலீசின் சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது சந்தீப் ஹெக்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு சல்மான்கானின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த மாதம் இதேபோல பிரபல ஹிந்தி பாடகர் சோனு நிகமின் தந்தை வீட்டிலும் அங்கே பணிபுரிந்த கார் டிரைவர் இதேபோன்று பணத்தை கொள்ளை அடித்து சென்றதும், இங்கே தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவின் வீட்டிலும் அங்கே பணிபுரிந்த பெண் இதேபோன்று நகைகளை திருடியதும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்கிய நிலையில், தற்போது சல்மான்கான் சகோதரி வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.