பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் சுற்றுலா சென்ற இடத்தில் பிகினி உடையுடன் கடற்கரையில் அமர்ந்திருப்பது, சுற்றி தருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டு சுற்றுலா என்றாலும் கூட சாய் பல்லவி இந்த மாதிரி உடை அணிவாரா என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, “இதுதான் நாங்கள் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட உண்மையான படங்கள். இது எதுவுமே ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல” என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பில் சாய் பல்லவி எப்போதும் அணிகின்ற கண்ணியமான உடைகளையே அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்தவகையில் சாய் பல்லவி உடை சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.