என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் சுற்றுலா சென்ற இடத்தில் பிகினி உடையுடன் கடற்கரையில் அமர்ந்திருப்பது, சுற்றி தருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டு சுற்றுலா என்றாலும் கூட சாய் பல்லவி இந்த மாதிரி உடை அணிவாரா என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, “இதுதான் நாங்கள் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட உண்மையான படங்கள். இது எதுவுமே ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல” என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பில் சாய் பல்லவி எப்போதும் அணிகின்ற கண்ணியமான உடைகளையே அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்தவகையில் சாய் பல்லவி உடை சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.