ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றுக்கு காரில் சென்றபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். அப்போது காரை விட்டு இறங்கி ஒரு வாலிபரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு சென்றார். மறுநாள் அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கு லிப்ட் கொடுத்த இளைஞருக்கு நன்றி தெரிவித்தார். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவர் எப்படி சட்டவிதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லலாம் என்று விமர்சனம் எழுந்தது, உடனடியாக அமிதாப் அந்த படம் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது. சும்மா ஜாலிக்காக அதனை வெளியிட்டேன், என்று மறுத்தார்.
இதேபோன்ற சர்ச்சையில் அனுஷ்கா ஷர்மாவும் சிக்கினார். போக்குவரத்து நெரிசலில் ஒரு இளைஞரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது., இந்த நிலையில் தற்போது அமிதாப்பச்சன், அனுஷ்கா சர்மா ஆகியோரை அழைத்து சென்ற வாகன ஓட்டிகள் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக மும்பை போக்குவரத்து போலீஸ் துறை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. நடிகர்களுக்கு ஒரு நீதி, அப்பாவிகளுக்கு ஒரு நீதியா? என்ற குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.