லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தமிழ், மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நவ்யா நாயர். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ஓணம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகருக்கு சென்றிருந்தார்.
மெல்போர்ன் விமான நிலையத்தில் அவரது உடமைகளை பரிசோதனை செய்த அதிகாரிகள் அவரது கை பையில் பூ இருப்பதை கண்டுபிடித்தனர். ஆஸ்திரேலிய சட்டப்படி விமானத்தில் பூ கொண்டு செல்லக்கூடாது என்பதால் அவருக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நவ்யா நாயர் கூறும்போது "நான் விமானம் ஏறும்போது, என்னுடைய தந்தை தலையில் வைப்பதற்காக பூ வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக்கி ஒன்றை தலையில் வைத்து மீதமுள்ள பூவை நான் கைப்பையில் வைத்திருந்தேன்.
மெல்போர்ன் விமானநிலையத்தில் இறங்கிய பின்னர் என்னுடைய கைப்பையை சோதனையிட்ட அதிகாரிகள், பூ வைத்திருந்த குற்றத்திற்காக எனக்கு 1980 டாலர் (இந்திய மதிப்பில் 1.14 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்தனர். விமானத்தில் பயணம் செய்யும்போது கைப்பையில் பூ கொண்டு வரக்கூடாது என்பது இங்குள்ள சட்டம் என்று எனக்குத் தெரியாது.
வெறும் ஒரு முழம் பூவுக்காக எனக்கு இவ்வளவு ரூபாய் அபராதம் விதித்துவிட்டனர். தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். 28 நாட்களுக்குள் அபராதத்தை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இதை நான் சொல்வதற்கு காரணம் மற்றவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார்.